Monday 11 March 2013

அடுத்த மகளிர் தினத்தன்றாவது....



வாழ்த்துக்கள் சொன்னேன் -
மகளிர் தினத்தன்று.
நேரில்,  ஒரு சிலருக்கு;
குறுஞ்செய்தி வழியாய் மேலும் சிலருக்கு;
அலுவலக அறிவிப்புப் பலகையில்  
அலங்கார வாழ்த்து ஒட்ட
அதிகம் மெனக்கெட்டேன் – அதில்,
பெண்மையின் மேன்மையை
ஊருக்குப் பறைசாற்றினேன்!
மாலையில் வீடு திரும்பியபின் தான் - என்
மரமண்டைக்கு உரைத்தது;
உயிர் தந்து உருவாக்கிய தாயை,
உடன் உறைந்து நிறைவு தரும் மனைவியை,
பெற்றெடுத்த நன்முத்துக்களை
வாழ்த்தவில்லையே என்று!
சபதம் செய்தேன் -
அடுத்த மகளிர் தினத்தன்று - என்
முதல் வாழ்த்து இவர்களுக்கே என்று!

Wednesday 6 March 2013

நண்பன் கிருஷ்ணகுமாரின் குறுங்கவிதையை
உங்களின் ரசனைக்கும்  வைக்கிறேன்.
___________________________________________________________________________




குப்புறப் படுத்து தூங்கியது குழந்தை;
சுகமாயிருந்தது -
தலையணைக்கு!

_____________________________________________________________________________




சந்தோசத்தில் .....
மேலும் கீழும் .....
குதியாட்டம் போட்டது;
குழந்தையை சுமந்த தொட்டில்!